* ‘கோல்’ வணிக இலக்கியத்தில் தமிழில் வந்த முதல் கதைப்புத்தகம்


வணிக இலக்கியத்தில் தமிழில் வந்த முதல் கதைப்புத்தகம்
இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எண்பது லட்சம்
பிரதிகளுக்கும் மேல் விற்பனையான ‘THE GOAL’ என்ற புத்தகத்தின்
தமிழாக்கமே ‘கோல்’ . இது ஆனந்த விகடனில் தொடராக
வெளிவந்தது.

இஸ்ரேலில் பிறந்த இலியாஹி எம்.கோலட்ராட் என்பவர்
எழுதிய புத்தகம்தான் இது. தமிழில் ‘அஞ்சனா தேவ்’ எழுதியுள்ளார்.
‘இலியாஹி எம்.கோலட்ராட்’ A.G.I என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக (http://www.goldratt.com/) நடத்தி உலகின் பல நிறுவனங்களுக்கு ஆலோசனை
அளித்து வருகிறார். இந்த புத்தக ஆசிரியரைப் பற்றியே ஒரு புத்தகம்
எழுதலாம்.

மிக நலிந்து போயிருக்கும் ஒரு தொழிற்சாலையின் தலைவராக
வரும் ‘ரோகோ’, எப்படி தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி,குடும்பத்தையும் சமாளிக்கிறார் என்பதே கதை. அதற்குள் அவர்
சந்திக்கும் பிரச்சனைகளும், வேதனைகளும், தொழிற்நுட்பங்களும், மனிதர்களின் மனோநிலைகளும், எளிமையாய் கற்கும் பற்பல விஷயங்களும் நம்மை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கின்றன. தமிழில் மிக அருமையாய் விளக்கிருக்கிறார் அஞ்சனா தேவ்.


நண்பர் ஒருவருக்கு இந்நூலை அறிமுகப்படுத்தினேன்,சாதாரணமாக படிக்க துவங்கியவர் புத்தகத்தின் சுவாரசியத்தில் இதைப் படிப்பதற்காகவே
ஒரு நாள் விடுமுறை எடுத்து புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட்டார்.


வெற்றி பெற சிந்திப்பவர்கள் ...
சாதிக்க முயற்சிப்பவர்கள்...
உயர்ந்த லட்சியங்களை அடையதுடிப்பவர்கள் ...
நிச்சயம் படிக்கலாம்!

No comments: